திருக்குறள்
- திரு + குறள் = மேன்மை பொருந்திய குறள்.
- ஈரடி குறள் வெண்பாக்களால் ஆனது.
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- தமிழ் மொழியிலுள்ள அறநூல்களில் முதன்மையானது.
- அடையடுத்த கருவியாகு பெயர்.
- மொத்த அதிகாரங்கள் - 133.
- மொத்த குறள்கள் - 1330.
1. அறத்துப்பால் - 38 அதிகாரங்கள் - 4 இயல்கள்
பாயிரவியல் - 4 அதிகாரங்கள்
இல்லறவியல் - 20 அதிகாரங்கள்
துறவறவியல் - 13 அதிகாரங்கள்
ஊழியல் - 1 அதிகாரம்
2. பொருட்பால் - 70 அதிகாரங்கள் - 3 இயல்கள்
அரசியல் - 25 அதிகாரங்கள்
அங்கவியல் - 32 அதிகாரங்கள்
ஒழிபியல் - 13 அதிகாரங்கள்
3. காமத்துப்பால் - 25 அதிகாரங்கள் - 2 இயல்கள்
களவியல் - 7 அதிகாரங்கள்
கற்பியல் - 18 அதிகாரங்கள்
வேறு பெயர்கள்:
- உலகப்பொதுமறை
- வாயுறை வாழ்த்து
- பொதுமறை
- பொய்யாமொழி
- தெய்வநூல்
- உத்தரவேதம்
- தமிழ்மறை
- முப்பால்
- திருவள்ளுவப்பயன்
- திருவள்ளுவம்
- பொருளுரை
- முதுமொழி
மொழிபெயர்ப்பு:
- 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
- லத்தீன் - வீரமாமுனிவர்
- ஆங்கிலம் - ஜி.யு.போப்
முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் - மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்
ஆண்டு - 1812
இடம் - தஞ்சை
உரை எழுதியவர்கள் - பதின்மர்:
- தருமர்
- மணக்குடவர்
- தாமத்தர்
- நச்சர்
- பரிதி
- பரிமேலழகர்
- திருமலையர்
- மல்லர்
- கவிப்பெருமாள்
- காளிங்கர்
"உடைமை" என்னும் பெயரில் 10 அதிகாரங்கள் உள்ளன.
7 சீரால் அமைந்தது.
7 என்னும் எண்ணுப்பெயர் 8 குறட்பாக்களில் உள்ளது.
அதிகாரங்கள் - 133 ⇒ 1+3+3 = 7
குறள்கள் - 1330 ⇒ 1+3+3+0 = 7
பழமொழி:
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
- பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்
⇴ தமிழ் மனிதன் இனிய உயிர்நிலை என்று உலகோரால் பாராட்டப்படுகிறது.
⇴ மனிதன் மனிதனாக வாழ மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரை .
⇴ அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள் - அவ்வையார்
⇴ வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - பாரதியார்
⇴ வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே - பாரதிதாசன்
⇴ இணையில்லை முப்பாலுக்கிந் நிலத்தே - பாரதிதாசன்
⇴ உலகினில் நாகரிகம் முற்றிலும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம் - கால்டுவெல்
⇴ சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால், திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன் - காந்தியடிகள்
⇴ உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறளும் இடம் பெற்றுள்ளது.
⇴ இங்கிலாந்து நாட்டிலுள்ள அருங்காட்சியகத்தில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது
⇴ இங்கிலாந்து நாட்டு மகாராணியார் விக்டோரியா, காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்
⇴ திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று. அது மன்பதைக்கு - உலகுக்குப் பொது -திரு.வி.க
⇴ திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிராவிட்டால், ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது - கி.ஆ.பெ.விசுவநாதம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக